close
Choose your channels

அர்ச்சனாவை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா கமல்ஹாசன்?

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோவில் அர்ச்சனாவை புகழ்வது போல கமலஹாசன் கிண்டல் செய்வது போல் வெளிவந்திருக்கும் வீடியோ நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

’அன்பே தந்திரமாக இருக்கும் போது அதை விட சிறந்தது இந்த உலகத்தில் வேறு ஏதுமில்லை’ என்று அர்ச்சனாவை பார்த்து கூறிய கமல், ’அன்பு எப்போது கிடைத்தாலும் அதை வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் நீங்கள் பாட்டுக்கு கோபித்துக் கொள்ள வேண்டாம்’ என்று பாலாஜியிடமும் கூறுகிறார்.

’நன்றாக தீப்பொறி பறந்து கொண்டிருந்த போது சட்டென்று தண்ணீரை ஊற்றி அணைத்து பாசமாக இணைந்து விட்டார்கள் என்பது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் ஆடியன்ஸ்களுக்கு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது’ என்று பொடி வைத்து பேசியதும் அர்ச்சனாவை அவர் வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

மேலும் ரியோவிடம் ’உங்களுடைய டீம் குறித்து சொல்லுங்கள்’என்று கமல்ஹாசன் மீண்டும் வஞ்சப்புகழ்ச்சி செய்தபோது கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்ட ரியோ, ’டீம் கிடையாது’ என்று கூற அதற்கு உடனடியாக கமல் ’கேப்டன் என்று தான் சொல்ல வந்தேன்’ என்று சமாளித்தது கமல்ஹாசனுக்கு உரிய கிண்டலான நகைச்சுவை ஆகும்

ஆனால் ஆரம்பத்திலிருந்தே வஞ்சப்புகழ்ச்சியாக கமல் பேசுவதை புரிந்து கொண்ட அர்ச்சனாவின் முகம் போன போக்கைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.