close
Choose your channels

கூண்டோடு கைலாசமா? கமலின் அடுக்கடுக்கான கேள்விகளால் அர்ச்சனா குரூப் அதிர்ச்சி!

Saturday, December 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என்றும் போட்டியாளர்கள் அனைவரும் கூறிக் கொண்டிருந்தாலும் குரூப்பிஸம் இருக்கிறது என்பது பார்வையாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

கமல்ஹாசனுக்கும் அது கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தெரிந்தாலும் அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மறைமுகமாகவே குரூப்பிஸம் குறித்த ஒரு சில கேள்விகளை கேட்டு அவர்களுக்கு இது குழுவாக விளையாடும் விளையாட்டு அல்ல, தனித்திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு என அட்வைஸ் செய்தார். ஆனால் அர்ச்சனாவும் சரி பாலாஜியும் சரி தங்களது சார்பில் ஒரு குரூப் இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் இருவருமே குரூப்பிஸம் தங்களிடம் இல்லை என்பதை கடைசிவரை சாதித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளார். போட்டியாளர்களிடம் அவர் எழுப்பிய சில சாட்டையடி கேள்விகளுக்கு போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

இந்த விளையாட்டின் அடிநாதம் புரியவில்லை என்று அனிதா மற்றும் பாலாஜியை கூறலாம் என்று கால் சென்டர் டாஸ்க் குறித்து கூறிய கமல்ஹாசன், கேபி மற்றும் சோம் ஆகிய இருவரும் பேசி வைத்துக் கொண்டு விளையாடுவது போல் இருந்தது என்று கூறியதோடு எதுக்காக விட்டு கொடுத்தீர்கள் சோம்? என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

மேலும் ‘நிஷா உங்கள் சாயலில் இன்னொரு சகோதரி இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன் ரமேஷிற்கு நீங்கள் விட்டுக் கொடுத்தீர்கள் என்றும் அவர் கூறினார். மேலும் டீம் டீம்களாக போகுமோ அல்லது இரண்டு இரண்டாக சேருமோ அல்லது கூண்டோடு கைலாசமா? என கமல்ஹாசன் கூறியபோது போட்டியாளர்களில் அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை என்பதுதான் உண்மையாக இருந்தது.

மொத்தத்தில் இன்றைய 2-வது புரோமோவை பார்க்கும்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பாக அர்ச்சனா குரூப்பினர்களுக்கு கமல்ஹாசன் தனது சாட்டையால் சுழற்றியுள்ளார் என்றே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.