close
Choose your channels

சம்பந்தப்பட்டவங்களே சொன்னா நல்லாயிருக்கும்: பாலா குருப்புக்கு கிடுக்கிப்பிடி போட்ட கமல்!

Sunday, November 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற சண்டைகளில் பாலாஜி-கேப்ரில்லா மற்றும் கேப்ரில்லா-ஷிவானி சண்டைகள் என்பது தெரிந்ததே. இந்த பிரச்சினை குறித்து கமலஹாசன் கேப்ரில்லாவிடம் விசாரித்தபோது ’ஹானஸ்ட் என்றால் என்ன? ஹானஸ்ட்டி என்றால் என்ன? என்று கிண்டலுடன் கேள்வி எழுப்பினார்

அப்போது கேப்ரில்லா ’பாலா திருடியதை நான் கண்ணால் பார்த்தேன். அதனால் பாலாவிடம் ஹானஸ்ட்டா என்கிட்ட சொல் என்று சொன்னபோது பாலாவும் அதற்கு பதிலும் சொல்லி முடித்து விட்டார். ஆனால் வெளியில் போய் விட்டு உள்ளே வந்த பின் மறுபடியும் ’ஏதோ ஹானஸ்ட் என்று கூறினாயே அது என்ன என்று கேட்டு பிரச்சனை செய்தார் என்றபோது குறுக்கிட்ட கமல்ஹாசன், ‘வெளியில் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு கேப்ரில்லா ’வெளியில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது’ என்று கூற ’எனக்கு தெரியுமே’ என்று சிரித்தபடி கமலஹாசன் கூறியதும் ‘என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சார்’ என்று கேப்ரில்லா கூறியவுடன் அந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர போட்டியாளர்கள் அனைவரும் கைத்தட்டி சிரித்தனர்

அதன் பின்னர், ’நான் சொல்வதைவிட சம்பந்தப்பட்டவர்களே சொன்னால் நல்லாயிருக்கும்’ என்று கமல் கூறியபோது பாலாஜியின் குரூப்பில் உள்ளவர்களின் முகம் தொங்கிப் போனது. இதனையடுத்து பாலாஜி குரூப்புக்கு கமல்ஹாசன் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு என்ன பதில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வருகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.