close
Choose your channels

இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது: பாலாஜியின் செருப்பு விவகாரம் குறித்து கமல்!

Saturday, December 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல்முறையாக கமல்ஹாசன் சாட்டையை சுழற்றி போட்டியாளர்களை வறுத்து எடுத்து வருகிறார் என்பதை இன்றைய இரண்டு புரமோக்களின் மூலம் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் மூன்றாவது புரமோ வெளியாகி உள்ளது. இந்த புரமோவில் அவர் பாலாஜிக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவிக்கிறார் கமல்ஹாசன். இந்த கோவிட் காலத்தில் வெளியே போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், வீட்டுக்குள் போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், என இரண்டு செருப்புகள் வைத்து இருக்கின்றார்கள். ஆனால் பாலாஜி 3 செருப்புகள் வைத்துள்ளார். வெளியில் ஒன்று, வீட்டுக்குள் ஒன்று, மூஞ்சில் அடித்துக் கொள்வதற்கு ஒன்று’ என்று கமல் கூறினார்.

மேலும் சனம் ஷெட்டியை பார்த்து ’உங்களை அவமானப்படுத்தி விட்டார் என்று நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் பாலாஜி பயமுறுத்தியுள்ளார் என்று எனக்கு தோன்றியது. குமுறும் ஒரு கோபமாகத்தான் அது இருந்தது. வயலென்ஸ்ஸின் விளிம்பு அது, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று கமல் கூறியபோது பாலாஜியின் முகம் சுருங்கியது.

மொத்தத்தில் பாலாஜியின் செருப்பு விவகாரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.