இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது: பாலாஜியின் செருப்பு விவகாரம் குறித்து கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல்முறையாக கமல்ஹாசன் சாட்டையை சுழற்றி போட்டியாளர்களை வறுத்து எடுத்து வருகிறார் என்பதை இன்றைய இரண்டு புரமோக்களின் மூலம் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் மூன்றாவது புரமோ வெளியாகி உள்ளது. இந்த புரமோவில் அவர் பாலாஜிக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவிக்கிறார் கமல்ஹாசன். இந்த கோவிட் காலத்தில் வெளியே போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், வீட்டுக்குள் போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், என இரண்டு செருப்புகள் வைத்து இருக்கின்றார்கள். ஆனால் பாலாஜி 3 செருப்புகள் வைத்துள்ளார். வெளியில் ஒன்று, வீட்டுக்குள் ஒன்று, மூஞ்சில் அடித்துக் கொள்வதற்கு ஒன்று’ என்று கமல் கூறினார்.

மேலும் சனம் ஷெட்டியை பார்த்து ’உங்களை அவமானப்படுத்தி விட்டார் என்று நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் பாலாஜி பயமுறுத்தியுள்ளார் என்று எனக்கு தோன்றியது. குமுறும் ஒரு கோபமாகத்தான் அது இருந்தது. வயலென்ஸ்ஸின் விளிம்பு அது, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று கமல் கூறியபோது பாலாஜியின் முகம் சுருங்கியது.

மொத்தத்தில் பாலாஜியின் செருப்பு விவகாரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விரைவில் பிக்பாஸ் கவின் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின், 'நட்புன்னா என்னன்னு தெரியுமா?' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் 'லிப்ட்

கார்த்திக் சுப்புராஜின் விக்ரம்-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முடிவடைந்துள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் சியான் விக்ரம் மற்றும்

'நாட்டாமை' புகழ் பிரபல குணசித்திர நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பழம்பெரும் குணசித்திர நடிகரும் வசனகர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் இன்று காலமானார் அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 

கூண்டோடு கைலாசமா? கமலின் அடுக்கடுக்கான கேள்விகளால் அர்ச்சனா குரூப் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என்றும் போட்டியாளர்கள் அனைவரும் கூறிக் கொண்டிருந்தாலும் குரூப்பிஸம் இருக்கிறது என்பது பார்வையாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனாவா??? கதிகலங்க வைக்கும் தகவல்!!!

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் சார்பாக 2 தடுப்பூசிகள்  கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட சோதனையில் இருந்து வருகிறது.