மூணு வாரம் தான் இருக்குது: இன்னும் உணர மாட்டேங்குறாங்க: கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்று 83வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் 17 நாட்களில் முடிவடைய போகிறது என்பதும், விரைவில் இறுதிப்போட்டி நடக்கப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒருவர் வெளியேறியபின் மீதமிருக்கும் எட்டு போட்டியாளர்களில் நால்வர் இறுதி போட்டியில் பங்கு கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோ வீடியோவில் இறுதி போட்டி நெருங்கும் நிலையில் கூட போட்டியாளர்கள் இன்னும் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கொள்ளவில்லை என கமல்ஹாசன் ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார். அவர் இன்றைய புரமோவில் கூறியதாவது:

நீங்கள் தப்பு பண்றீங்க என்று ஒருவர் சுட்டிக் காட்டினால், நான் மட்டுமா தப்பு பண்ணுகிறேன் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். இன்னும் மூன்று வாரம்தான் உள்ளது. ஆனால் அவங்க தப்பை அவங்க உணர்ந்தார்களோ இல்லையோ நீங்கள் சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் என்பது நீங்கள் ஓட்டு போடும் முறையில் இருந்தே தெரிகிறது. மக்கள் தீர்ப்புதான் இறுதியானது என்பதை அவர்கள் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது’ என்று கமல்ஹாசன் இன்றைய புரொமோவில் கூறியுள்ளார்.

More News

எல்லை மீறிய ரசிகர்கள்: அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா, வீட்டிற்கு வந்து முதல் வாரத்தில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்திருப்பார் என தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய

2021 இல் என்ன நடக்கும்??? கொரோனாவை கணித்த பாபா வங்காவின் கருத்து என்ன???

ஒட்டுமொத்த உலகத்திற்கும் 2020 ஆம் ஆண்டு ஒரு கெடுங்காலமாக மாறிவிட்டது. கொரோனா பரவல்

8 நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ்??? இளம் வயதினரை அதிகம் பாதிக்குமா???

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியது.

நேற்றைவிட இன்று நலமாக உள்ளார்: ரஜினி குறித்து அப்பல்லோ அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

தமிழகத்தைப் பின்பற்றி 1 ரூபாய்க்கு உணவு… டெல்லியில் கலக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டார்.