தூங்குனவங்களுக்கு ஓட்டு போடாதீங்க: பாலாவுக்கு சொல்றாரா? மக்களுக்கு சொல்றாரா கமல்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைமுகமாக அரசியல் பேசி வந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விட்டு வைப்பாரா? கடந்த இரண்டு சீசன்களிலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் சிக்ஸர் அடித்து வருகிறார்

அந்த வகையில் இன்றைய புரமோவிலும் அவர் போட்டியாளர் பாலாஜிக்கு சொல்வது போல் மக்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறார். பாலா இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாமல் அவ்வப்போது தூங்கி விளையாட்டை மிஸ் செய்ததால் அவரை குறிப்பிடும் வகையில் ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’, என்று கூறியதோடு, ‘நீங்கள் விழிப்புடன் இருந்தால் மாற்றங்கள் வரும். உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்க போகிறது என்பதை பார்க்கலாம்’ என்று கமலஹாசன் மறைமுகமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பாலாவின் தூங்கும் காட்சிகள் இருந்தாலும், அவர் உண்மையில் இதனை பாலாஜிக்குத்தான் சொல்கிறாரா அல்லது விரைவில் வரவிருக்கும் தேர்தலில் தூங்கி பொழுதை கழித்தவர்களுக்கு உங்கள் ஓட்டு வேண்டாம் என்று மக்களுக்கு சொல்கிறாரா? என்பது அந்த ஆண்டவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை