close
Choose your channels

கமல் முன் குவிந்து கிடக்கும் பஞ்சாயத்துக்கள்: சாட்டையை சுழற்றுவாரா?

Saturday, November 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களுக்கு மேல் ஆன பின்னரும் கமல்ஹாசன் தவறு செய்யும் போட்டியாளர்களை இதுவரை கடுமையாக கண்டிக்கவில்லை என்றும், அவர் அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கொடுத்து வருகிறார் என்பதும் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. கடந்த சீசன்கள் போல் இல்லாமல் இந்த முறை மிகவும் சாஃப்ட்டாக போட்டியாளர்களை கமல் கையாண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த வாரம் ஏகப்பட்ட பிரச்சனைகள் கமல் முன் இருப்பதால் அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய நிலையில் அவர் உள்ளார். ஆரி தன்னுடைய தாய்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம்சாட்டிய சம்யுக்தா குறித்து இன்று கமல் விசாரிக்க வாய்ப்பு உள்ளது

அதேபோல் சம்யுக்தாவின் சர்ச்சைக்குரிய வார்த்தையான ’வளர்ப்பு சரியில்லை’ என்பது குறித்தும் ஆரி பிரச்சனையை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆரி மற்றும் பாலாஜி சண்டையின் போது ‘வேறு ஒன்றை நீட்டி பேசுவேன்’ என்று பாலாஜி கூறியதும், ‘நீ ஆம்பளையா இருந்தா’ என ஆரி கூறியதும் இந்த வார பஞ்சாயத்துக்களில் ஒன்றாகும். அது தவிர அனிதா, சனம் நட்பு குறித்து ரியோ பேசியது, கேப்டன் ரியோவே ஒரு விதியை உருவாக்கி அந்த விதியை அவரே மீறியது உள்பட இன்றும் நாளையும் கமலுக்கு இந்த வார பஞ்சாயத்துக்களை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும் என கருதப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.