உங்ககிட்ட இருந்து நான் கத்துகிடனும்: சனம்ஷெட்டியை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கே அறியாமல் கலாய்த்து அந்த தவறை உணர்த்தும் வல்லமை படைத்தவர் கமலஹாசன் என்பதை கடந்த நான்கு சீசன்களில் நாம் பார்த்து வருகிறோம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல போட்டியாளர்களின் தவறுகளை கமல் சுட்டிக் காட்டி வரும் நிலையில் தற்போது வந்துள்ள மூன்றாவது புரமோவில் சனம்ஷெட்டிக்கும் அவர் செய்த தவறை சுட்டிக் காட்டுகிறார்.

குப்பைத்தொட்டியில் சாப்பாடு போடும் விவகாரம் குறித்து ஆரி கூறிய போது அந்த சாப்பாட்டை ’நான் தான் போட்டேன் என்னுடைய தவறுதான், சாரி’ என்று கூறியிருந்தால் இவ்வளவு தூரம் இந்த விஷயம் பிரச்சனையாக மாறி இருக்காது என்று கமல் கூறியபோது சனம், ‘அந்த சாப்பாட்டை நான் கொட்டவில்லை என்று கூறவில்லை, நானாக இருக்கலாம் என்று தான் கூறினேன்’ என்று கூறி சமாளிக்க அதற்கு கமல், ‘உண்மையிலேயே நான் உங்களிடமிருந்து இதுபோன்ற பதில்களை சொல்வது எப்படி என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சனம்ஷெட்டியை கலாய்க்க அவர் தலையை கீழே தொங்கப் போட்டுக் கொண்டார்.

சனம்ஷெட்டி செய்த தவறை மிகவும் சாதுரியமாக சுட்டிக்காட்டிய கமல்ஹாசனின் இந்த முழு காட்சி இன்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

சூரறைபோற்று பாணியில் ஒரு தனியார் விண்கலம்… தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில்!

விலை மலிவான விமான போக்குவரத்து எனும் கேப்டன் கோபிநாத்தின் கனவுத் திட்டத்தைத்தான் சூரரைப் போற்று திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

தேன்மொழி சீரியல் நடிகர் கொலை: நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமா?

'கலக்கப்போவது யாரு' புகழ் ஜாக்குலின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் நேற்று சென்னையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்

கண்ணை மறைக்கும் பாலாஜியின் காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே

என் வார்த்தையை நம்புங்கள், எந்த சேதமும் ஏற்படாது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவ மழை பெய்யும் போது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக

வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய விஜய்சேதுபதி பட நடிகை!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தவர் மட்டுமின்றி