close
Choose your channels

திடீரென பொங்கி எழுந்த கேப்டன் ரமேஷ்: டாப் சிக்ஸில் வருவது யார்?

Thursday, December 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 60வது நாளை தொட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் யார்? மோசமாக செயல்பட்டவர் யார்? என்பதை வரிசைப் படுத்தும் படி பிக்பாஸ் கூறியிருந்தார்

இதனை அடுத்து 1 முதல் 6 வரை உள்ள முதல் 6 இடங்களைப் பிடிக்க போட்டியாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த டாஸ்க்கில் ஒருத்தரை நாமினேஷனில் இருந்து சேவ் பண்ண வேண்டும் என்பதற்காக சேவ் பண்ணியவர்கள் டாப் சிக்ஸில் வரக்கூடாது என்று பாலாஜி தனது கருத்தை முன்வைக்கின்றார்

உடனே கேப்டன் ரமேஷ் பொங்கி எழுகிறார். நீ அந்த டாப் சிக்ஸில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா? நீ பாட்டுக்கு ஆரியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுவிட்டு அவரை பதில் கூட சொல்ல விடாமல் போய்விட்டாய். அவர் இரவு தூங்கினாரா என்பது கூட உனக்கு தெரியாது’ என்று ஆரிக்காக ரமேஷ் பொங்கியது அதிலும் அர்ச்சனா குரூப்பில் உள்ள அவர் தனது குரூப்பில் இல்லாத ஒருவருக்கு பொங்கியது ஆச்சரியத்தை அளித்தது

கேப்டன் டாஸ்க்கில் அதிருப்தியை தெரிவித்தது, ரமேஷ் அப்பாவை தேவையில்லாமல் இழுத்தது ஆகியவை காரணமாக பாலாஜி மீது ரமேஷ் கோபமாக இருப்பதே இவ்வாறு பொங்கியதற்கு காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.