close
Choose your channels

அப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ!

Saturday, January 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நாளை கிளைமாக்ஸில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த நிலையில் இன்று ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என ஏற்கனவே கமல்ஹாசன் முதல் புரமோவில் தெரிவித்துள்ள நிலையில் சற்று முன்னர் இரண்டாவது புரமோ வெளிவந்துள்ளது.

அதில் ’உங்கள் நண்பர்களின் வருகை எப்படி இருந்தது என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு ரம்யா ’வெளியில் இருந்து வந்தவர்கள் வெளியில் நடப்பதை சிலவற்றை கூறினார்கள். அதைக் கேட்டு கொஞ்சம் அப்செட் ஆக இருந்தது என்று கூறினார். அதன் பின்னர் ரியோ, ‘இங்கு வந்த நிறைய பேர் எங்களை பற்றி கூறியதை கேட்டவுடன் ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.

அப்போது கமல்ஹாசன் ’எனக்கு உங்கள் முகத்தை பார்க்கும்போது பிடிக்கவே இல்லை. காற்று போன பலூன் போன்று இருக்கின்றீர்கள். வெளியில் வந்தால் உங்கள் முகம் கண்டிப்பாக மலரும். இந்த ஒரு சைடு வேற இருக்கின்றதா? தேவையில்லாமல் கவலைப்பட்டு இருந்தோமே என்று நீங்கள் நினைக்க தான் போகிறீர்கள்’ என்று கூறியவுடன் தான் அனைவருக்கும் சற்றுநிம்மதியும் சிரிப்பும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஆரியை மற்ற அனைவரும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளார்கள் என்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.