ரசிகர்களை இழக்கிறாரா ரம்யா பாண்டியன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் போட்டியாளர் ரம்யா மட்டுமே. குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி இடமிருந்து எவிக்சன் பாஸை திறமையாக பெற்று அதை அவர் ஆஜித்துக்கு விட்டுக் கொடுத்த பின் அவருடைய இமேஜ் வேற லெவலுக்கு சென்றது மட்டுமின்றி அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீட்டில் புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா தான் என்று அவரது ஆர்மியினர் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களை இழந்து வருவது போல் தெரிகிறது.

குறிப்பாக ஆரிக்கு எதிராக யார் சண்டை போட்டாலும் உடனே அவர்களுக்கு ஆதரவாக ரம்யா சொம்பு தூக்குகிறார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய கருத்துக்கு ஆதரவாக ரம்யா பேசுவது பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற டாஸ்க்கில், ‘ஒரு பெண்ணிடம் பேச கூட தெரியவில்லை, இவனெல்லாம் வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு, இவனுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்லை என்று அப்போதும் ரம்யாவிடம் தான் சம்யுக்தா கூறினார். ஆனால் அவ்வாறு சொல்வது தவறு என்று ரம்யா சம்யுக்தாவிடம் கூறவில்லை.

ஆரிக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசுவதும் ஆஜித்துக்கு ஆதரவாக மட்டுமே இருப்பதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி உள்பட மற்ற சண்டைகளை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் ரம்யா, ஒருசில சண்டைகளில் மட்டுமே தனது ஆதரவை தெரிவிக்கும் பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் ரம்யாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் அபாயம் உள்ளது என்று என்று தெரிகிறது.

More News

வாங்க நாம பிக்பாஸ்க்கு போவோம். தமிழ் ஹீரோவை அழைக்கும் பிரேம்ஜி அமரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கடந்த சீசன்களில் உள்ள விறுவிறுப்பு இந்த சீசனில் குறைவு என்றே பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ரியோ-ஆஜித் கால்சென்டர் உரையாடலை கலாய்க்கும் ரம்யா!

பிக்பாஸ் வீட்டில் தற்போது கால்சென்டர் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் பாலாஜி-அர்ச்சனா, சனம்-சம்யுக்தா, ரம்யா-ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி-சோம் ஆகியோர்களின் உரையாடல் நடைபெற்றது

நிவர் புயல் கரையை கடந்தது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.30 மணி முதல் அதிகாலை 2 30 மணி வரை

மாரடைப்பால் மறைந்தார் மாரடோனா: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவருக்கு வயது 60 

லட்சுமி விலாஸ் வங்கி… கை மாற்றப்படுகிறதா???

இந்தியா முழுவதும் கிளைப்பரப்பி இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி அதன் நிதி நிலைமை தொடர்பாக தற்போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின்