2 செல்லக்குட்டிகளை மிஸ் செய்கிறேன்: பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடியே நடிகை ரேகா முதல் போட்டியாளராக வெளியேறினார் என்பதும் அவரை கண்ணீருடன் அனைவரும் வழியனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிந்ததே

குறிப்பாக ரேகா வெளியேற்றத்தை தாங்கமுடியாமல் ஷிவானி கண்ணீர் விட்டு கதறி அழுததும் பாலாஜி சோகமே உருவாக இருந்ததும் சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவாக ஷிவானி மற்றும் பாலாஜி ஆகிய இரண்டு செல்லாக்குட்டிகளையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் கூறி ’உம்மா’ என்று ஒரு முத்தத்தையும் பதிவு செய்துள்ளார்

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷிவானி அதிகம் யாரிடமும் பேசாமல் இருந்தாலும் அவரிடம் வலியப் போய் பேசி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர ரேகா முயற்சி செய்தார் என்பதும் அதனால் ரேகாவின் பிரிவை முடியாமல் ஷிவானி கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலாஜிக்கும் அவ்வப்போது அறிவுரை கூறி வந்த ரேகா வெளியேறியது அவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களுக்கு பாரதிராஜா வைத்த செக்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ள காரணத்தினால் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

தமிழக முதல்வருடன் முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தார்.

நாட்டை விட்டே வெளியேறி விடுவேன்… எதிர்க்கட்சியினரை நோக்கி சாவல் விடும் அதிபர் ட்ரம்ப்!!!

வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது,

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

'நம்ம வீட்டு பிள்ளை' நாயகிக்கு கிடைத்த மெகா பட்ஜெட் பட வாய்ப்பு!

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தகவலை சமீபத்தில் பார்த்தோம். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார்