close
Choose your channels

கமல்ஹாசன் முன் ரியோ முகமூடியை கிழித்த சக போட்டியாளர்கள்!

Sunday, October 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 13 நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று எவிக்சன் பிராசஸ் நடைபெற உள்ளது. இன்றைய எவிக்சனில் ரேகா வெளியே வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. முன்னதாக நேற்று ஷிவானி, ஆஜித் மற்றும் ரம்யா ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்து நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முன் நடக்கும் டாஸ்க் ஒன்றில் ‘யார் மாஸ்க் போட்டிருக்கின்றார்கள்? யார் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்படி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு போட்டியாளர்கள் மாஸ்க் போட்டு இருக்கும் நபர்களையும் இயல்பாக இருக்கும் நபர்களையும் குறிப்பிட்டுள்ளனர்

இதில் பெரும்பாலானோர் மாஸ்க் போட்டு இருப்பதாக ரியோவை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரியோ மாஸ்க் போட்டு தனது ஒரிஜினல் முகத்தை மறைப்பதாக பெரும்பாலான போட்டியாளர்கள் கூறியுள்ளனர். அவரை அடுத்து ஆரியை அதிக நபர்கள் தேர்வு செய்தனர்

முகமூடி போட்டு இருப்பதாக உங்களை பெரும்பாலோர் தேர்வு செய்தது நியாயம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா என்று கமலஹாசன் ரியோவிடம் கேட்டபோது ’எனக்கு கொடுத்தது நியாயமில்லை என்று தோன்றுகிறது’ என்று ரியோ பொங்கி எழுந்துள்ளதை அடுத்து காரசாரமாக விவாதம் இன்றைய நிகழ்ச்சியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.