இந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறந்த போட்டியாளர்களும் மோசமான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். சிறந்த போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டியில் தேர்வு பெறுவார்கள் என்பதும், மோசமான போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதும் தெரிந்தது

அந்த வகையில் இன்றைய மூன்றாம் புரமோவில் மோசமான போட்டியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் நாம் எதிர்பார்த்தபடியே ரியோவை சனம் நாமினேட் செய்கிறார். கால்சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் அனிதா ஆகியோர்களின் நட்பை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் ரியோவை நாமினேட் செய்வது போல் தெரிகிறது

சனம்ஷெட்டியை அடுத்து வந்த நிஷா, தங்கள் குரூப்பில் உள்ள ரியோவை சனம் நாமினேட் செய்ததால் அவர் சனம்ஷெட்டியை நாமினேட் செய்தார். அதேபோல் பாலாஜி ஆரியை நாமினேட் செய்தார். கடைசியில் ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் மோசமான போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டது

இந்த அறிவிப்பின்போது குறுக்கிட்ட சனம், ‘இதில் தனிப்பட்ட பகையும் கலந்திருக்கிறது என்று கூற உடனே முதல் முறையாக நிஷா பொங்கி எழுந்தார். நிஷா-சனம் வாக்குவாதத்துடன் இன்றைய மூன்றாம் புரமோ முடிவடைகிறது

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இல்லை என்று அனைத்து போட்டியாளர்களும் கூறி வந்தாலும் சிறந்த போட்டியாளர் மற்றும் மோசமான போட்டியாளர்களின் தேர்வின்போது அப்பட்டமாக குரூப்பிஸம் இருப்பது தெரிய வருகிறது என்பதுதான் உண்மை

More News

'டேய் லூசுத்தம்பி': சீண்டிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய குஷ்பு!

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த குஷ்புவை காங்கிரஸ் கட்சியினரும் நெட்டிசன்களும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும், அவ்வப்போது தன்னை நேரடியாக சீண்டி விமர்சனம்

பாலா மீது அன்பா? காதலா? நெற்றி பொட்டில் அடித்த ஆரி!

பிக்பாஸ் 4வது சீசனில் உள்ள ஒரே காதல் ஜோடி என பாலாஜி-ஷிவானி இருந்து வரும் நிலையில் இந்த காதல் குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய விஷயத்தை ஆரி கன்பக்சன் அறையிலும் சக போட்டியாளர்களிடமும் கூறியுள்ளார்.

போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்!!!

நெல்லை மாவட்டத்தில் தன்னைத் தாக்கிய போலீசார் முன்னிலையிலேயே 45 வயதான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்!!!

துபாய் ஒட்டியுள்ள புறநகர் பாலைவனப் பகுதிகளில் ஆதரவற்று பல ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை!!!

அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கிறது.