close
Choose your channels

ரியோ-ரம்யா மோதல்: ஒரு வழியாக வாயை திறந்த ஷிவானி

Thursday, October 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வாயை திறக்காமல் மணிரத்னம் பட வசனம் போல் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த இரண்டு போட்டியாளர்கள் ஆஜித் மற்றும் ஷிவானி. இவர்கள் இருவரும் உண்மையில் போட்டியாளர்களா? அல்லது விருந்தாளிகளா? என்ற சந்தேகம் கூட பார்வையாளர்களுக்கு ஏற்பட்டது

இந்த நிலையில் நேற்றைய அரக்கர்கள், ராஜ வம்சத்தினர் டாஸ்க்கின் போது ஒருவழியாக ஷிவானி பேசியது மட்டுமின்றி சனம் ஷெட்டியிடம் ஒரு சிறு மோதலிலும் ஈடுபட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது 

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் முதல் முதலாக ரியோ-ஷிவானி மோதும் காட்சிகளும் இருக்கின்றன. இந்த வீட்டில் ஒரு சில நிமிடங்களாவது எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ரியோ சொல்ல, அதற்கு ஷிவானி ’ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் நேரடியாக பேசுங்கள் மறைமுகமாக பேச வேண்டாம்’ என்று கூறுகிறார் 

அதன் பின்னர் ஷிவானி, ஆஜித் மற்றும் ரம்யா ஆகிய மூவரும் தனியாகவே இருக்கின்றார்கள் எல்லோரிடமும் சேர மாட்டார்கள் என்று ரியோ குற்றம்சாட்ட, அதற்கு மறுத்து பேசிய ரம்யாவால் ஒரு மோதல் ஏற்படுகிறது 

நேற்றைய சுரேஷ் மற்றும் சனம்ஷெட்டி மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் இன்று ரியோ-ஷிவானி-ரம்யா மோதலை வைத்து இன்றைய நிகழ்ச்சியை ஒட்டி விடுவார்கள் போல் தெரிகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.