close
Choose your channels

ரம்யாவை அடுத்து ரியோவுக்கும் பயத்தை காட்டிய ஆரி!

Monday, January 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் மூன்று வாரங்கள் அமைதியாக இருந்த ஆரி, நான்காவது வாரம் முதல் ’இந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைக்க போகிறேன்’ என்று சவால் விடுத்திருந்தார். அன்று தொடங்கிய ஆரியின் சாம்ராஜ்யம் இன்று வரை பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் ஆரியை எதிர்த்து பேசியவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்சனின்போது ரம்யாவை இறுதி கட்டம் வரை கொண்டு சென்று அவர் கண்ணில் பயத்தை காட்டியது ஆரியின் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலாவுக்கும் தண்ணிகாட்டிய ஆரி, தற்போது ரியோவுக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டதாக தெரிகிறது

இன்றைய 2-வது புரோமோ விடியோவில் ஆரி குறித்து ரியோ கூறியபோது, ‘ஆரி ஒரு பயத்தை கொடுக்கின்றார். பயமுறுத்துகிறார். நீங்கள் என்னை இப்படி சொல்லி விட்டீர்கள் என்றால் மக்கள் இதற்கு என்ன கேட்பார்கள் தெரியுமா? என்று அவர் கூறுகிறார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்கள் வரவில்லை என்று நான் மிகவும் எளிமையாக கூறியதை வைத்து பயமுறுத்துகிறார்.

ஆனால் அதற்கு நான் நூறு சதவீத உழைத்திருக்கிறேன், உழைப்பை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். ஆரியின் குழந்தையின் மேல் நான் ஆசையாக விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு மாதிரி வெறுப்பை உருவாக்குகிறார். இவர் பேசிய சில வார்த்தைகளால் எனக்கு அதிகமாக கோபம் தான் வருகிறது என்று ரியோ கேபியிடம் கூறியுள்ளார்

மொத்தத்தில் ரியோவுக்கும் ஆரி பயத்தை காட்டிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.