close
Choose your channels

இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு: அனிதாவை அசிங்கப்படுத்திய சம்யுக்தா!

Thursday, October 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் அனிதா சிரித்து கொண்டிருந்த நேரத்தைவிட அழுதுகொண்டிருந்த நேரமும் புலம்பி கொண்டிருந்த நேரமும் தான் அதிகம் என்பது பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது

இந்த நிலையில் இன்றைய சொந்தக்கதை சோகக்கதை டாஸ்க்கில் அனிதாவின் டர்ன் வரும் போது தன்னுடைய தன்னுடைய கணவர் தனக்காக உருகி உருகி செய்ததையும், தனக்கு முதன் முதலில் ஒரு ஆண் பாசம் கிடைத்ததே கணவர்தான் என்றும் தந்தை என்னை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும் தனது பாணியில் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சம்யுக்தா, ‘தயவுசெய்து குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும், ரொம்ப லாங்கா போகுது’ என்று கூற உடனே அனிதா உடனே ‘சாரி’ என்று கூறிவிட்டு தனது உரையை முடித்துக் கொள்கிறார்

தன்னுடைய பேச்சை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் புலம்பித் தள்ளிய அனிதாவை இப்போது சம்யுக்தா திடீரென அசிங்கப்படுத்தியதால் கண்டிப்பாக இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கும் என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.