close
Choose your channels

ரியோ-சனம் குரூப்பிஸ சண்டை: விழுந்து விழுந்து சிரித்த பாலாஜி!

Wednesday, November 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாக போட்டியாளர்களிடையே சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக ஆரி-பாலாஜி, ஆரி-சம்யுக்தா, பாலாஜி-அர்ச்சனா, பாலாஜி-கேபி, என இரண்டு இரண்டு பேர்களாகவும், சில சமயம் ஒருவரை டார்கெட் செய்து ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த சண்டை ரியோ மற்றும் சனம் இடையே நடைபெறுகிறது. அர்ச்சனா குருப்பின் மிகப்பெரிய டெக்னிக் என்னவெனில் யாரிடமாவது சண்டை போட்டால் உடனே அவர்களிடம் சரண்டர் ஆகியோ அல்லது அவர்களை புகழ்ந்து பேசியோ தங்கள் குருப்பில் இழுத்து கொள்வதுதான்.

இந்த டெக்னிக்கில் ஏற்கனவே ஒருமுறை சனம் நழுவிய நிலையில் இன்று சனம்-அனிதா நட்பை ரியோ பாராட்டி பேசுகிறார். அப்போது சனம், ’நெகட்டிவ்வாக சொல்றதெல்லாம் சொல்லிட்டு அப்படியே பாசிட்டிவ்வாக சொன்னால், அதை ஒத்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை’ என்று கூற, அதனால் கடுப்பான ரியோ, ‘இப்ப என்ன செய்யணும்ங்கிற’ என்கிறார். குரூப்பிஸம், அன்பை தேடி போற என்ற குற்றச்சாட்டை பிரேக் பண்ண வேண்டும் என்பதற்காக தப்பான காலருக்கு நீங்க கால் பண்றிங்க’ என்று சனம் சொல்ல, இதனால் ஆத்திரமடைந்த ரியோ, நான் தப்பான காலரை தேடி போகலை, மைண்ட் யுவர் வேர்ட்ஸ்’ என்கிறார்.

இந்த நிலையில் சனம், ரியோ சண்டையை சாப்பிட்டு கொண்டே வேடிக்கை பார்க்கும் பாலாஜியும், ஷிவானியும் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சிகளுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவடைந்துள்ளது. மொத்தத்தில் கடந்த இரண்டு நாட்களை போலவே இன்றும் செம விருந்து காத்திருக்கு போல

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.