ரியோ-சனம் குரூப்பிஸ சண்டை: விழுந்து விழுந்து சிரித்த பாலாஜி!

  • IndiaGlitz, [Wednesday,November 25 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாக போட்டியாளர்களிடையே சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக ஆரி-பாலாஜி, ஆரி-சம்யுக்தா, பாலாஜி-அர்ச்சனா, பாலாஜி-கேபி, என இரண்டு இரண்டு பேர்களாகவும், சில சமயம் ஒருவரை டார்கெட் செய்து ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த சண்டை ரியோ மற்றும் சனம் இடையே நடைபெறுகிறது. அர்ச்சனா குருப்பின் மிகப்பெரிய டெக்னிக் என்னவெனில் யாரிடமாவது சண்டை போட்டால் உடனே அவர்களிடம் சரண்டர் ஆகியோ அல்லது அவர்களை புகழ்ந்து பேசியோ தங்கள் குருப்பில் இழுத்து கொள்வதுதான்.

இந்த டெக்னிக்கில் ஏற்கனவே ஒருமுறை சனம் நழுவிய நிலையில் இன்று சனம்-அனிதா நட்பை ரியோ பாராட்டி பேசுகிறார். அப்போது சனம், ’நெகட்டிவ்வாக சொல்றதெல்லாம் சொல்லிட்டு அப்படியே பாசிட்டிவ்வாக சொன்னால், அதை ஒத்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை’ என்று கூற, அதனால் கடுப்பான ரியோ, ‘இப்ப என்ன செய்யணும்ங்கிற’ என்கிறார். குரூப்பிஸம், அன்பை தேடி போற என்ற குற்றச்சாட்டை பிரேக் பண்ண வேண்டும் என்பதற்காக தப்பான காலருக்கு நீங்க கால் பண்றிங்க’ என்று சனம் சொல்ல, இதனால் ஆத்திரமடைந்த ரியோ, நான் தப்பான காலரை தேடி போகலை, மைண்ட் யுவர் வேர்ட்ஸ்’ என்கிறார்.

இந்த நிலையில் சனம், ரியோ சண்டையை சாப்பிட்டு கொண்டே வேடிக்கை பார்க்கும் பாலாஜியும், ஷிவானியும் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சிகளுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவடைந்துள்ளது. மொத்தத்தில் கடந்த இரண்டு நாட்களை போலவே இன்றும் செம விருந்து காத்திருக்கு போல

More News

2015 ஐ நினைவுப்படுத்துமா செம்பரபாக்கம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களும் தற்போது நிவர் புயலின் காரணமாக விரைந்து நிரம்பி வருகிறது.

திறக்கப்படுகிறது செம்பரப்பாக்கம் ஏரி: 2015 திரும்புமா?

வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு: நிவர் குறித்து கவிப்பேரரசு கவிதை!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய கால் சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் சம்யுக்தா காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சனம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறிய சம்யுக்தா, 'வளர்ப்பு சரியில்லை'

டாஸ்க்கில் விட்டுக்கொடுத்த கேபி: பாலாஜி சொன்னது உண்மைதானா ?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் குரூப்பில் சோமசேகர், ரியோ மற்றும் கேபி இருப்பதாக நேற்று பாலாஜி சொன்னதை இன்றைய டாஸ்க்கில் கேபி மற்றும் சோம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்