சொன்னபடியே கெத்தா ஜெயிக்க வச்சிட்டார் பாலாஜி! அர்ச்சனா குரூப் அப்செட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ விடியோவில் தோல்வி அடைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைப்பது தான் கெத்து என்று பாலாஜி கூறியது குறித்து பார்த்தோம்.

இந்த நிலையில் சுரேஷ் வழக்கில் வாதாடிய ரியோ, ‘ஒரு உரையாடலின் போது இடையில் குறிக்கிடுவது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் அதை எப்போது குறுக்கிட வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். மேலும் ஒரு சம்பவம் நடக்கும்போது நடுவில் புகுந்து சனம் அவருடைய கருத்தை கூறுவதால், அந்த கருத்தால் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையும் அவருடைய பிரச்சனையும் காணாமல் போய் திசை திரும்பி விடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த பாலாஜி ’நடுவில் வந்து பேசக்கூடாது என்று சொல்வதே அனைவரையும் பேசுவதை நிறுத்துமாறு சொல்வது போல் இருக்கின்றது என்றும், இப்படி இருந்தால் நாளை யாரும் இந்த வீட்டில் கருத்து சொல்ல மாட்டார்கள்’ என்று கூறுகிறார்.

இறுதியில் தீர்ப்பு அளித்த நீதிபதி சுசித்ரா, சனம் தரப்பினர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனை அடுத்து சனம் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பாலாஜி ஏற்கனவே சொன்னது போலவே சனம் வழக்கில் வெற்றி பெற வைத்து கெத்து காட்டி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. பாலாஜியின் வெற்றி நிச்சயம் அர்ச்சனா குரூப்புக்கு அப்செட் ஆக இருந்திருக்கும்.