பிக்பாஸ் வீட்டின் புது ஜோடி ஷிவானி-பாலாஜி?

பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் கடந்த சில நாட்களாக சிறுசிறு மோதல் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென மோதல் வெடித்தது. கிளீனிங் டீமில் உள்ள பாலாஜி வேலை செய்யவில்லை என்றும் அவரையும் வேலை செய்யச் சொல்லுங்கள் என்றும் வேல்முருகனை அர்ச்சனா தூண்டிவிட இதனால் ஏற்பட்ட பிரச்சனை பெரும் கலகலப்பாக மாறியது

இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில் அர்ச்சனா-பாலாஜி மோதும் காட்சிகளும் அதனை அடுத்து பாலாஜி கண்ணீருடன் கலங்கியிருந்த காட்சிகளும் இருந்தன. இந்த நிலையில் தற்போது பாலாஜிக்கு ஆறுதல் கூறும் வகையில் ஷிவானி சில விஷயங்களை கூறுகிறார். நீங்கள் மிகவும் நேர்மையாகத்தான் பேசுகிறீர்கள் என்றும் ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் உங்களை தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்

இந்த நிலையில் பாலாஜி, ஷிவானி ஆகியோர் பேசியதை கவனித்துக்கொண்டிருந்த சம்யுக்தா, ‘என்ன ஓகே ஆயிடுச்சா’ என்று கேட்க அதற்கு பாலாஜி சிரித்துக்கொண்டே ’என்ன ஓகே ஆயிருச்சா? எது கேட்பதாக இருந்தாலும் தெளிவாக கேளூங்கள்’ என்று கூறுகிறார்

மொத்தத்தில் பேசவே பேசாத ஷிவானியும், அதிகமாக பேசும் பாலாஜியும் இந்த சண்டையின் மூலம் ஒரு புது ஜோடி உருவாகியுள்ளது என்பது மட்டும் தெரிகிறது. இதைவைத்து பிக்பாஸ் ஒரு காதல் நாடகத்தை சில நாட்கள் நடத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மிரட்டல் விவகாரம், நடந்தது என்ன? சீனுராமசாமி பேட்டி

தனது உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு முதல்வர் ஐயா உதவ வேண்டும் என்றும் சற்று முன்னர் இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி: ஒரே படத்தில் முன்னணி நட்சத்திரங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது முன்னணி இயக்குனர்கள் அனைவரும் திரைப்படம் இயக்குவதற்கு பதிலாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.

விஜய் டிவி பிரபலத்திற்கு திருமணம்: தீனா உள்பட சக நட்சத்திரங்கள் வாழ்த்து!

விஜய் டிவி மூலம் பல்வேறு நட்சத்திரங்கள் சின்னத்திரையில் ஜொலிப்பது மட்டுமின்றி சின்னத்திரையில் இருந்து பெரிய திரையிலும் நடித்து வருகின்றனர்.

விவாகரத்தான மனைவி வீட்டில் விருந்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் ஐந்து வருடங்களுக்கு முன் விவாகரத்தான மனைவியின் வீட்டில் விருந்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

என்னை கொல்ல வர்றாங்க, காப்பாத்துங்க: குவாரண்டனில் அலறினாரா சுசித்ரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை ரேகா மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார்.