close
Choose your channels

எல்லாத்துக்கும் ஸ்டாப்: வந்தவுடனே அர்ச்சனாவை அப்செட் ஆக்கிய சுசித்ரா!

Sunday, November 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பாடகி சுசித்ரா வந்திருக்கும் நிலையில் இதுவரை நடந்த நாட்களில் போட்டியாளர்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை குறிக்கும் வகையில் எல்லோருக்கும் ஒரு அடையாளத்தை கொடுக்கின்றார்.

அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தபோது மக்களின் பிரதிநிதியாக என்ன சொன்னாரே, அதே வேலையை இன்று சுசித்ரா செய்கிறார். அதிலும் அர்ச்சனாவுக்கு அவர் கொடுத்த கமெண்ட் அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கும். நீங்கள் எல்லோரையும் பேசவிடாமல் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று சுசித்ரா சொன்னபோது ’எனக்கு புரிந்துவிட்டது’ என்று கூறி மேலும் பேசவிடாமல் அவரை தடுத்ததில் இருந்தே அர்ச்சனாவுக்கு தனது நிலை என்ன? மக்கள் தன்னைப்பற்றியும் தன்னுடைய தாய்ப்பாசம் குறித்தும் என்ன பேசியிருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டார் என தெரிகிறது. இனியும் தாய்ப்பாசம், தங்கைப்பாசம் என்ற தந்திரத்தை பயன்படுத்தாமல் இயல்பாக விளையாடினால் அர்ச்சனாவுக்கு இன்னும் கூட நீண்டதூரம் போக வாய்ப்பு உள்ளது.

அர்ச்சனா மட்டுமின்றி அவரது குரூப்பில் உள்ள ரியோவுக்கும் சுசித்ரா நெகட்டிவ் கமெண்ட் கொடுத்துள்ளதால் அவரும் குருப்பிஸத்தில் இருந்து வெளியே வரவேண்டிய நேரமிது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.