close
Choose your channels

நீதிபதி யார் சார்? கமல் முன் சுசியை கலாய்த்த சுரேஷ்!

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் நீதிபதி என்ற பதவியை கோமாளித்தனமாக பயன்படுத்திய சுசித்ராவுக்கு ஏற்கனவே நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வந்தன

ஒரு நீதிபதி என்பவர் இரு தரப்பு வாத பிரதிவாத அடிப்படையில்தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் பார்வையாளர்களை கையைத் தூக்கச் சொல்லி விட்டு, யாருக்கு அதிகமாக ஆதரவு இருக்கிறதோ அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிப்பது என்பதே கோமாளித்தனமாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டது

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இது குறித்து கமல்ஹாசன் விசாரணை செய்யவுள்ளார் என்றும் சுசியை கமல் வறுத்தெடுக்கவுள்ளார் என்றும் வெளிவந்த செய்தியை நேற்றே பார்த்தோம். அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில், இந்த கேஸ்க்கும் நீதிபதிக்கும் எந்த சம்பந்தமில்லையா? என கமலஹாசன் கேட்க அப்போது சுரேஷ், ‘நீதிபதி யார் சார்? என்று கலாய்க்க மற்ற போட்டியாளர்களை அனைவரும் அதற்கு சிரித்தது சுசித்ராவுக்கு தர்மசங்கடமாக இருந்தது

மேலும் நீதிபதியின் செயல்பாடு குறித்து ரியோ உள்பட அனைவரிடமும் கமல்ஹாசன் கேட்ட போது கிட்டத்தட்ட அனைவருமே சுசித்ரா மீது குற்றம் சாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.