மீண்டும் களமிறங்கும் சிம்மசொப்பனம் சுரேஷ்? சூடு பிடிக்கும் பிக்பாஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் தந்திரமான விளையாட்டை இதுவரை எந்த போட்டியாளரும் கடைபிடித்ததில்லை. ஆனாலும் அவர் எப்படி வெளியேற்றப்பட்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
சுரேஷ் வெளியேற்றப்பட்ட தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் களமிறங்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சீசனில் வெளியேற்றப்பட்ட வனிதாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது போல் இந்த முறை சுரேஷூக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மிக விரைவில் சுரேஷ் மீண்டும் களமிறங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரம்யா உள்பட அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சுரேஷ் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி தந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.