close
Choose your channels

செய்தி வாசிப்பில் அனிதா செய்த தவறு: திருத்திய ரியோ

Monday, October 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி தொடங்கி தற்போது 20 நாட்களில் முடிந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசன் மட்டும் ஒரு வித்தியாசமான சீசனாகவும், பெருமைக்குரிய சீசனாகவும் கருதப்படுகிறது

ஏனெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. எனவே இந்த சீசனில் ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய மூன்று பண்டிகையையும் பிக்பாஸ் போட்டியாளர் கொண்டாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்

இந்த நிலையில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறுகிறது. நேற்று எவிக்சன் பாஸை பயன்படுத்தி ஆஜித் தப்பித்துவிட்டதால் எவிக்சன் இல்லை என்பதும் அதனால் அனைத்து போட்டியாளர்களும் இன்று ஆயுதபூஜை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ’பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கில் நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது என்று அனிதா செய்தி வாசிப்பது போல் கூறினார். இதில் குறுக்கிட்ட ரியோ, ‘நான்கு மணி நேரம் இடைவெளி இன்றி கொண்டாட்டம்’ என தவறை திருத்த அதற்கு சாரி என்று கூறி அனிதா செய்தி வாசிப்பை மேலும் தொடர்கிறார்

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைபெற உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இன்றைய நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ள மாட்டார் என்பதும் போட்டியாளர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விளையாட்டுகள் மட்டும் இன்று இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.