close
Choose your channels

வெறுப்பாகிய வேல்முருகன்: நின்னு விளையாடும் நிஷா!

Monday, October 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க, அதற்கு பாலாஜி ஏன் தயங்குகிறாய்? உனக்கு என்ன பயமா? என்று கேட்கிறார்.

எனக்கு என்ன பயம் நான் சொல்கிறேன்? என்று சொல்லிவிட்டு வேல்முருகன் பெயரை அறந்தாங்கி நிஷா சொல்கிறார். அடுத்து வந்த ரம்யா பாண்டியனும் வேல்முருகன் பெயரைச் சொல்ல ’நான் அமைதியாகத்தானே இருக்கிறேன், என்னுடைய பெயரை ஏன் சொல்கிறார்கள் என்று வெறுப்பாகிறார்.

இதனால் டென்ஷனான அர்ச்சனா கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கின்றீர்களா என்று கத்தி கூற வேல்முருகன் அப்போதுதான் அமைதி ஆகிறார். பொதுவாக கொளுத்திப் போடும் வேலையை செய்யும் சுரேஷ் சக்ரவர்த்தி இம்முறை அமைதியாக இருக்க, பாலாஜி இம்முறை கொளுத்திப் போட்டு நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க, அறந்தாங்கி நிஷாவும் நின்னு விளையாட, மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி இந்த டாஸ்க்கால் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos