close
Choose your channels

அபிஷேக் பிளானை சுக்குநூறாக்கிய நிரூப்: பிக்பாஸ் வீட்டில் முதல் குரூப்பா?

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் குரூப்புகள் சேர்ந்து விட்டன என்பது குறித்த தகவல்களை பிக்பாஸ் போட்டியாளர்களே தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா தலைமையில் குரூப் உண்டாகிவிட்டதாக மற்ற போட்டியாளர்கள் உணர்கின்றனர்.

இன்றைய இரண்டாவது புரமோவில் இதுகுறித்து ப்ரியங்கா கூறும்போது, நம்ம கேங் மேல நிறைய பேர் இப்ப வெறியாவாங்க. நம்ம மூணு பேருதான் டிஸ்லைக் ஓட்டு போட்டோம் என்றும் இது நாம் கேங் ஃபார்ம் பண்ண வேண்டும் என்பதற்காக போடவில்லை என்றும், தானாகவே நடந்து விட்டது என்றும் பிரியங்கா கூறுகிறார்.

அப்போது அபினய் நம்மை குறி வைப்பான் என்றும், அது அவன் கண்ணிலேயே தெரிகிறது என்றும் கூறிய அபிஷேக், இது வெறும் டிரையல் தான், இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு டபுள் டமாக்காவாக மாறும் என்று கூறுகிறார்.

அப்போது நிரூப் சிரித்துக்கொண்டே பிரியங்காவிடம், ‘அப்படி நடந்தா அவன் இருக்க மாட்டான்’ என்று அபிஷேக்கை பார்த்து கூற, ப்ரியங்கா, நிரூப் இருவரும் கைகொட்டி சிரித்தனர். அப்போது பரிதாபமாக அபிஷேக் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதிலிருந்து ப்ரியங்கா தலைமையில் ஒரு குரூப் ஃபார்ம் ஆகிவிட்டது உறுதியாகிறது. இந்த குரூப், கடந்த சீசனில் அர்ச்சனா குரூப் போல் மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்த இந்த ப்ரோமோ வீடியோவுக்கு பின்னர் அபிஷேக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா கேங்கில் டிராவல் செய்துவிடலாம் என்று அபிஷேக் திட்டமிட்டதாகவும், அந்த திட்டத்தை நிரூப் சுக்குநூறாக உடைத்துவிட்டதாகவும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.