அபிஷேக்கிற்கு மரண பயத்தை காட்டிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் இன்று வெளியேற இருக்கும் நிலையில் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதைக் கூறும் கமலஹாசனின் மூன்றாவது புரமோ சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த புரமோவில் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற போகிறார்கள் என்று கமல்ஹாசன் கூற அந்த இருவரில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை இன்னும் சற்று நேரத்தில் கூறப் போகிறேன் என்று கமல்ஹாசன் கூறுகிறார்

அப்போது சின்ன பொண்ணு சிரித்தபடியே எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் நிலையில் அபிஷேக் சோகத்துடனும், பயத்துடனும் உட்கார்ந்திருப்பதை பார்க்கும்போது அவரது மனதில் ஒரு மரண பயம் ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வை அவரது முகத்தில் பார்க்க முடிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியின் படி இன்று அபிஷேக் வெளியேறி விட்டதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு நிகழ்ச்சியின்போது அபிஷேக் உண்மையிலேயே வெளியேறிவிட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பாலைவனத்தில் பைக்கில் பயணம்: தல அஜித்தின் வைரல் புகைப்படம்!

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் உலகம்

சூர்யாவுடன் முதன்முதலாக இணைந்த 'பீஸ்ட்' டான்ஸ் மாஸ்டர்

தளபதி விஜயின் 'பீஸ்ட்' படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் தற்போது முதல் முறையாக சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் முக்கிய அப்டேட்!

விஷால், ஆர்யா நடித்த 'எனிமி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

உடையும் பிரியங்கா - நிரூப் கூட்டணி: உண்மையா? அல்லது கேம் பிளானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று கூட்டணிகள் இருப்பதாக ஏற்கனவே நேற்று கமல்ஹாசனிடம் சுருதி கூறினார் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒரு கூட்டணி பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் என்பதும் குறிப்பிடத்தக்கது

நாளை இரண்டு முக்கிய நிகழ்வுகள்: ரஜினிகாந்த் அறிக்கை!

 நாளை தனது வாழ்வில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது சமூக வலைதளம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: