close
Choose your channels

பிக்பாஸ் வீட்டின் முதல் சண்டை: எதிர்பார்த்தது போலவே அபிஷேக் தான்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான சண்டை சச்சரவு எதுவும் வராமல் இருக்கிறது என்று ஒரு சில பார்வையாளர்கள் ஏக்கத்துடன் இருந்த நிலையில் அந்த குறை இன்று நிறைவேறி உள்ளது போல் தெரிகிறது.

இன்றைய தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் ராஜூ ஜெயமோகன் மற்றும் இசைவாணி ஆகியோர் கலந்து கொண்டு இருந்த நிலையில் அவர்களை சிரிக்க வைக்க மற்ற போட்டியாளர்கள் முயற்சித்து தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அபிஷேக் ஒரு படி மேலே போய் இசைவாணியை அவரது சொந்த வாழ்க்கை குறித்து இழுத்து சிரிக்க வைக்க முயற்சிக்கும் போது இமான் அண்ணாச்சி பர்சனல் பிரச்சனைகளை இழுக்க வேண்டாம், சிரிக்கவைக்க வேறு முயற்சி செய் என்று கூற அபிஷேக் மற்றும் இமான் அண்ணாச்சி இடையே மோதல் வெடிக்கிறது

அதில் ’மொத்த டாஸ்க்கையும் நீங்கள் கெடுத்து விட்டீர்கள், இதுக்கப்புறம் யாரை எப்படி சிரிக்க வைக்க முடியும் என்று கேட்க, நீ ரொம்ப புத்திசாலி மாதிரி பேசாதே என்று இமான் அண்ணாச்சி கூறுகிறார். அதற்கு அபிஷேக் ’நீங்க என்னை புத்திசாலி புத்திசாலி என்று என்னை ஒதுக்க பார்க்காதீர்கள், நீங்க தான் குரூப் சேருக்குறிங்க, உங்களுக்கு ராஜூ முக்கியம், எனக்கு யாரும் முக்கியமில்லை, நான் இன்னிக்கே கதவை திறந்துவிட்டாலும் நான் வெளியே போய் சந்தோஷமாக ஏதாவது பண்ணிக்குவேன் என்று கூற அப்போது இந்த விஷயத்தில் தலையிடும் ப்ரியங்கா, ‘இது ரொம்ப டூமச் அதெல்லாம் நீ பேசக்கூடாது என்று கூற ’நான் அப்படிதான் பேசுவேன்’ என்கிறார் அபிஷேக்

மொத்தத்தில் அபிஷேக்கிற்கும், இமான் அண்ணாச்சிக்கும் தொடங்கிய சண்டையால் பிக்பாஸ் வீட்டில் இரண்டு குரூப் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.