close
Choose your channels

மக்கள் எனக்கு பிச்சை போட்டிருக்காங்க: நிரூப்பிடம் அபிஷேக் ஆவேசம்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்கிறார்கள் என்றும் அதனால் அவர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதற்காக நான் என்னை கொளுத்தி கொள்ளவும் தயங்க மாட்டேன் என்று நிரூப் இடம் அபிஷேக் ஆவேசமாக பேசும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

அபிஷேக் மேலும் கூறியபோது, ‘நீ சிங்கம் சிங்கம் என்று வெளியில் அவ்வளவு பில்டப் கொடுத்துவிட்டு வந்து இருக்கின்றேன். நீ போவதென்றால் இப்ப கூட கிளம்பி போடா, பாவனியை இந்த வாரம் கேப்டன்ஷிப் எடுக்கச் சொல்லிவிட்டு அண்ணாச்சியை மனம் நோகச் செய்யாமல் அடுத்த வாரம் நீ தள்ளி வைத்திருக்கலாம். நீ ஏழு நாள் எக்ஸ்ட்ரா சலுகையை எதிர்பார்க்கிறாய்.

அன்பு கொடுப்பதில் லாஜிக் பாக்குறியா? சும்மா நிரூப் பிரியங்கா, நிரூப் பிரியங்கா என்று சொல்லி போரடித்து விட்டது. நான் இருக்கும் போதும் இதையேதான் பேசி கொண்டிருந்தீங்க, 60 நாள் ஆயிடுச்சு இன்னும் இதையேதான் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் சுவாரஸ்யத்தை நான் என்னை கொளுத்திவிட்டு கூட கொடுப்பேன்டா’ என்று ஆவேசமாக அபிஷேக் பேசும் காட்சிகள் உள்ளன. அபிஷேக் பேசுவதை நிரூப் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் அமைதியுடனும், அதிர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.