close
Choose your channels

நான் சொல்றத மட்டும் கேளு: முழுசா சந்திரமுகியா மாறிய அபிஷேக்!

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் நிகழ்ச்சியில் மட்டுமின்றி அனைத்துப் புரமோவிலும் வரவேண்டும் என்பதற்காக எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை ரசிகர்களும் சக போட்டியாளர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

அனைத்து விஷயங்களிலும் தன்னை முன்னிறுத்தி நடத்துவது போலவும் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு மூக்கை நுழைத்து வருவதாகவும் பலர் கருத்து கூறி வருகின்றனர். கடந்த வாரம் நூலிழையில் எவிக்சனில் இருந்து தப்பிய அபிஷேக் இன்னும் திருந்துவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவிலும், ‘நான் சொல்வதை மட்டும் எல்லோரும் கேளுங்கள், பிக்பாஸ் என்பது சென்டிமென்ட்டுக்கு இடமில்லாத ஒரு விளையாட்டு, இது முழுக்க முழுக்க ஒரு மைண்ட் கேம்’ என்று கூறுகிறார். மேலும் அவர் இதுகுறித்து காரசாரமாக சிபி சக்கரவர்த்தியிடம் விவாதம் செய்து வரும் காட்சிகளும் உள்ளன.

மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் முழுசா சந்திரமுகியாக மாறியுள்ள அபிஷேக் இருக்கும் வரை மற்ற போட்டியாளர்கள் நிம்மதியாக இருக்க முடியாது என்று தெரிகிறது ஆனால் கண்டெண்ட் கொடுக்கும் நபர் என்பதால் பிக்பாஸ் குழு இப்போதைக்கு அவரை வெளியேயும் அனுப்பாது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.