பிக்பாஸ் காயின்: அபிஷேக்கை காப்பாற்ற கொண்டு வந்த டாஸ்க்கா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பஞ்சதந்திரம் டாஸ்க்கின் முடிவில் திடீர் திருப்பம் ஏற்படும் என இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்து தெரியவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பஞ்சதந்திர டாஸ்க்கில் ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நாணயத்தை வெல்பவர்கள் தங்களை நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது தங்களுக்கு விருப்பமான ஒருவரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், அதே போல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவரை மாற்றி, கேப்டன் பதவியை தனக்கோ அல்லது தனக்கு பிடித்த ஒருவரையோ கேப்டனாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இப்போதைக்கு இந்த நாணயம் தாமரை, இசைவானி, பாவனிரெட்டி, நிரூப் மற்றும் வருண் ஆகியோர்களிடமும் இருப்பது போல் தெரிகிறது. இதில் தாமரை, பவானி ரெட்டி ,இசைவாணி ஆகியோர் அபிஷேக்கை காப்பாற்ற வாய்ப்பு இருப்பதாகவும், அது மட்டுமின்றி அவரை அடுத்த தலைவராக்கவும் வாய்ப்பு இருப்பதகாவும் இதுதான் பிக்பாஸில் திட்டமா? என்றும் நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ் கண்டெண்ட் கொடுக்கும் அபிஷேக் இன்னும் சில வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்பது இந்த டாஸ்க்கின் மூலம் தெரியவருவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்: எந்த படத்தில் தெரியுமா?

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் பிரச்சனையால் விஜய் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகை!

போதை பொருள் குறித்து பிரபல நடிகையிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதை அடுத்து விஜய் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஐபிஎல் அணியை ஏலம் எடுக்கும் பிரபல நட்சத்திர தம்பதி?

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடர்கள் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 அணிகள் இணைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணமா? ஆய்வின் முடிவு வெளியீடு!

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.