close
Choose your channels

என்னை பொருத்தவரைக்கும் வருண் போகக்கூடாது: அபிஷேக் சவால்

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு கோமாளித்தனம் செய்து கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதும், பலர் எரிச்சல் அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த பஞ்சதந்திரம் டாஸ்க்கில் அவர் செய்யும் தந்திரங்கள், சிறுபிள்ளைத்தனமாக இருப்பதைப் பார்த்து பிக்பாஸ் போட்டியாளர்களே அவரை கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் அபிஷேக், ‘டாப் 5 இடங்களில் நீயும் நானும் இருக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வருணை விட கூடாது, வருண் இங்கே காலடி எடுத்து வைத்தால் உன்னை விட மாட்டாங்க என்று பாவனியிடம் கூறுகிறார்.

இதனையடுத்து ஸ்ருதி, ‘அவங்க கேங் என்ன வேணாலும் செய்துகொள்ளட்டும் நீ எதற்கு அபிஷேக் அதெல்லாம் யோசிக்கிறாய் என்று கேட்க, அதற்கு அபிஷேக் என்னை பொறுத்தவரை வருண் போகக் கூடாது என்று கூறுகிறார்.

என்கிட்டயே சேலஞ்ச் பண்றானா? என்னையே சேலஞ்ச்சுக்கு கூப்பிடுகிறாரா என்று கூறும் அபிஷேக், ‘தயவு செய்து சுவாரஸ்யமாக ஏதாவது பண்ணுடா என்று கூறுவதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் சுவராசியமாக ஏதாவது செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு கோமாளித்தனங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அபிஷேக் எப்போது வெளியேறுவார் என்ற மனநிலைதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.