கமல் முன்னிலையில் சின்னப்பொண்ணுவை கதறி அழவைத்த அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இன்று முதல் போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய 2-வது புரோமாவில் சின்னப்பொண்ணுவை கதறி அழ வைத்த அபிஷேக் ராஜாவின் காட்சிகள் உள்ளன

இன்றைய 2வது புரமோவில் கமல்ஹாசன், ‘பிக்பாஸ் வீட்டில் ஒளிர்ந்தவர் யார்? ஜொலித்தவர் யார்? காணாமல் போனவர்கள் யார் என்பது குறித்த போட்டியாளர்களை தரம் பிரிக்க சொல்லி இருந்தார்கள். அவர்கள் யார் என்று கமல்ஹாசன் கேட்க அப்போது அபிஷேக் ராஜா, ஜொலித்தவர்கள் என்றால் என்னை பொருத்தவரை இமான் அண்ணாச்சி சொல்வேன் என்றும், காணாமல் போனவர்கள் என சின்னப்பொண்ணு அம்மா மற்றும் நாடியா சாங் ஆகியோர் கூட்டத்தில் காணாமல் போனவர்கள் என்றும் கூறினார்

அதற்கு பதிலளித்த நாடியா சாங், ‘நிறைய பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை, நான் மட்டும்தான் காணாமல் போனேன் என்று அவர் கூறுகிறார் என்றால் என்னை அவர் நோட்டீஸ் பண்ணியிருக்கிறார் என்று அர்த்தம். என்னை பொருத்தவரை நான் காணாமல் போகவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது’ என்று கூறினார்.

இந்த நிலையில் தன்னை காணாமல் போனவர் என்று கூறியதால் கதறி அழுத சின்னப்பொண்ணு, ‘சத்தியமாக நான் மக்கள் முன்னாடியோ அல்லது இவர்கள் முன்னாடியோ காணாமல் போக மாட்டேன் என்று அழுதபடியே கமல்ஹாசனிடம் கூறுகின்றார். நேற்றைய எபிசோடில் சின்னப்பொண்ணுவை தன்னுடைய தாய் போன்றவர் என உருக்கமாக கூறிய அபிஷேக் இன்று அவரை காணாமல் போனவர் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.