close
Choose your channels

ஓவர் ஆக்டிங், சுட்டிக்குழந்தை: ஆவேசமாக மோதும் அக்சரா-சிபி!

Friday, November 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ’கனா காணும் காலங்கள்’ என்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் மோசமாக செயல்பட்டவர்கள் குறித்த கருத்துக் கணிப்புகள் எடுக்கும் காட்சிகள் இன்றைய அடுத்த வீடியோவில் உள்ளன.

அதில் அக்சரா கூறும்போது, ‘என்னை பொருத்தவரை சிபி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்ததாக தெரிந்தது என்று கூற, இதற்கு பதிலளித்த சிபி, ‘என்னை பொருத்தவரை மோசமாக பர்பாமன்ஸ் செய்தவர் அக்ஷரா தான் என்றும், டாஸ்க் என்னவென்றே புரியாமல் சுட்டிக் குழந்தையாக இல்லாமல் ஓரமாக மூக்கை சிந்தி கொண்டு அழுது கொண்டே இருந்தார் என்று கூற, அக்சரா ஆவேசமாகி, ‘ஒழுங்காக பேச வேண்டும், அது செய்கிறார்கள் இது செய்கிறார்கள் என்று சொல்லக்கூடாது என்று கூற அதற்கு பதில் அளித்த சிபி, ‘சுட்டி குழந்தை என்றால் என்ன என்றே அர்த்தம் தெரியவில்லை என்று நினைக்கிறேன்’ என்று கூறுவதுடன் இன்றைய புரமோ வீடியோ முடிந்துள்ளது.

இன்றைய புரொமோவிலிருந்து அக்சரா மற்றும் சிபி இடையிலான மோதல் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.