close
Choose your channels

எட்டி உதைத்த போட்டியாளர்: ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இன்று இன்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் அனுப்பிய கறவை மாடுகளில் இருந்து அதிக பால் கறக்கும் போட்டியாளரே வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் புரமோவிலேயே கறவை மாட்டின் மடியிலிருந்து பால் கறப்பதற்கு போட்டியாளர்கள் போட்டி போட்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த புரமோவில் அந்த போட்டி ரணகளமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கறவை மாட்டில் இருந்து பால் பிடிப்பதற்காக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும், கறந்து வைத்த பாலை கீழே கொட்டியும் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொள்ளும் காட்சிகளும், கறந்து வைத்திருந்த பாலை கீழே போட்டு உடைக்கும் காட்சிகளும் உள்ளன.

மேலும் இரு அணிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறுகிறது என்பதும் ஒரு கட்டத்தில் கறவை மாட்டின் மடியிலிருந்து பால் அனைத்தும் கீழே கொட்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கறவை மாட்டையே துண்டு துண்டாக ஆக்கி விட்டனர் என்பதும் ஒரு கட்டத்தில் சிபி கறந்து வைத்த பாலை எட்டி உதைக்கும் காட்சிகளும் உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.