close
Choose your channels

அபிஷேக் முகத்தில் பேப்பரை தூக்கியெறிந்த சிபி: ஒரே அணிக்குள் ஏற்பட்ட மோதல்!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரெட் டிவி மற்றும் புளூ டிவி என இரண்டு அணிகள் பிரிந்து ஒவ்வொரு அணியில் உள்ளவர்கள் மற்ற அணியில் உள்ளவர்களின் இமேஜை உடைக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடர்கிறது. இன்றைய புரமோவில் ரெட் டிவியை சேர்ந்த சிபி மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் தாமரை மற்றும் வருண் ஆகியோர்களிடம் பேட்டி எடுத்து வருகின்றனர். தாமரை போன்ற நடிக்கும் சிபி, தனது கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில கேள்விகளை அவர் கேட்கிறார்.

அப்போது ஏன் எழுதிக் கொடுத்த கேள்விகளைக் கேட்கவில்லை என கூறும் அபிஷேக்கிற்கு சிபி விளக்கம் அளிக்கின்றார். ஆனால் அந்த விளக்கத்தை ஏற்று கொள்ளாத அபிஷேக் திடீரென விளம்பர இடைவெளி விடுகிறார். ஆனால் எல்லா நேரத்திலும் இடைவேளை விட முடியாது என்றும், நான் தொடர்ந்து பேசுவேன் என சிபி கூற அதற்கு அபிஷேக் ஒப்புக்கொள்ளாததை அடுத்து அபிஷேக் முகத்தில் பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கோபமாக சிபி செல்கிறார். இதனால் ரெட் டிவி அணிக்குள்ளே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அபிஷேக் மற்றும் சிபி இடையே ஏற்பட்ட மோதலில் சிபிக்கு வருண் ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து ஆளாளுக்கு பேசி வரும் நிலையில் திடீரென இந்த டாஸ்கின் நடுவரான சஞ்சீவ், ‘சைலன்ஸ்’ என ஆவேசமாக கத்தியது அனைத்து போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.