close
Choose your channels

சிபியுடன் மோதல்: வீட்டின் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் அக்சரா!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிபியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை அக்ஷரா தூக்கி போட்டு உடைக்கும் காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி 52வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது ‘கனா காணும் காலங்கள்’ என்ற பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய புரோமோவில் என்னுடைய உடையை ஸ்டீம் செய்ய வேண்டும் என்று வார்டன் சிபியிடம் அக்சரா அனுமதி கேட்கிறார். அதற்கு சிபி அனுமதி கொடுத்தாலும் உடனடியாக வரவேண்டும் என்றும், நேரமாகிவிட்டது என்றும் கூறுகிறார்

இதனால் டென்ஷனான அக்ஷரா எனக்கு போதுமான டைம் கொடுக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். இதனால் கோபப்படும் சிபி, ஸ்டீம் செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாது என்று கூற, ‘நான் அப்படித்தான் செய்வேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஆவேசத்துடன் அக்ஷரா செல்கிறார்

இதனை அடுத்து பாத்ரூம் பகுதிக்கு செல்லும் அக்ஷரா கோபத்தில் அங்கிருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் காட்சி இன்றைய முதல் புரமோவில் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.