close
Choose your channels

பிக்பாஸ் தமிழ்: குவாரண்டனில் இருக்கும் போட்டியாளர்களின் புகைப்படம் வைரல்!

Monday, September 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் கசிந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். மொத்தம் 20 போட்டியாளர்களை விஜய் டிவி தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், அதில் 16 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நமக்கு வந்த தகவலின்படி ஷாலு ஷம்மு, ப்ரியங்கா, ஜாக்குலின், பிரியாராமன், அக்சரா ரெட்டி, நிரூபன், சஞ்சீவ், ரேணுகா பிரவீன், நமீதா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, சுனிதா, உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்துதலில் உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவர்களில் ஒரு சிலரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புகைப்படத்தில் செய்தி வாசிப்பாளர் கண்மணி, ஷாலு ஷம்மு, மிளா மற்றும் கோபிநாத் ரவி ஆகியோர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் இவர்கள் நால்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.