close
Choose your channels

உங்க ரெண்டு பேரு மேல எனக்கு டவுட்: நிரூப், ப்ரியங்காவிடம் ஆவேசமாக மோதும் அண்ணாச்சி!

Monday, November 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி தலைவர் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய தலைவர் பதவியை நிரூப் தன்னிடம் இருக்கும் காயின் மூலம் பறித்துக் கொண்டார் என்பதும் அதன் பின்னர் அவரது ஆட்டம் தொடங்கி விட்டது என்பதையும் முதல் இரண்டு புரமோ வீடியோக்களில் இருந்து பார்த்தோம்.

இந்த நிலையில் தலைவர் பதவியை ஏற்று உள்ள நிரூப், தனது அதிகாரங்களை பிரித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். பெட்ரூமை அபிஷேக் கட்டுப்பாட்டில் கொடுக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது பிரியங்காவுக்கும் சில அதிகாரங்களை கொடுத்துள்ளார். இதற்கு இமான் அண்ணாச்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’உங்களுடைய பதவியை நான் பிடித்து விட்டேன் என்பதற்காக இப்படி பேசுவது தப்பு அண்ணாச்சி’ என்று நிரூப் கூறியதற்கு பதிலளிக்கும் இமான் அண்ணாச்சி, ‘தலைவர் பதவியை ஏற்ற நீங்கள் இப்படி செய்தால் நான் யாரிடம் போய் கேட்க முடியும். ஏலே நீதாண்டா தலைவர், உங்களுக்கு உரிய அதிகாரத்தை பிரித்து கொடுத்தால் இவங்க ரெண்டு பேரும் அதை மிஸ் யூஸ் பண்ணினல் நான் யாரிடம் போய் கேட்க்க முடியும் என்று கூற, உடனே பிரியங்கா ஆவேசமாக ’நாங்கள் எப்பொழுதும் மிஸ் யூஸ் பண்ணமாட்டோம்’ என்று கூறுகிறார்.

அப்போது இமான் அண்ணாச்சி ’உங்க ரெண்டு பேரும் மேல எனக்கு டவுட் இருக்கு’ என்று கூற அதற்கு பதிலடி கொடுக்கும் பிரியங்கா, ‘நீங்கள் எப்படி ஒவ்வொரு வேலையையும் ஓபி எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்று கூற அதற்கு இமான் அண்ணாச்சி மீண்டும் ஆவேசமாகும் காட்சிகளுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் இன்று பிரியங்கா, நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சிக்கு இடையே ஆவேசமான காரசார விவாதங்கள் நடைபெறும் என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.