close
Choose your channels

நிரூப்பை மாறி மாறி கலாய்க்கும் ராஜூ, இமான், அபிஷேக்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இரு அணிகளாக பிரிந்து பிக்பாஸ் போட்டியாளர்களின் பழைய நிகழ்வுகளை வெளியே கொண்டுவந்து கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று தாமரை மற்றும் பிரியங்கா, பாவனி மற்றும் பிரியங்கா, இமான் மற்றும் நிரூப் ஆகியோர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இந்த டாஸ்க்கில் அலசப்பட்டன. இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் ராஜு மற்றும் இமான் ஆகிய இருவரும் தங்களது எதிரணியில் உள்ள நிரூப்பை கலாய்க்கும் வகையில் செயல்படுகின்றனர். ‘சுயம்வரத்தை எதிர்பார்த்து வந்து சுய புத்தியை இழந்த நிரூப்’ என இமான் அண்ணாச்சி கலாய்க்க அதனை அடுத்து ராஜு அபிஷேக்கிடம், நிரூப் குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க அதற்கு அபிஷேக், ‘அவர் பெரிய பிளேயர் என எல்லோரும் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எப்போதுமே எதிரணிக்கு தான் செயல்படுகிறார். எனவே அவரை தயவு செய்து நீங்கள் எடுத்துக்கோங்க’ என தனது அணியில் இருக்கும் நிரூப்பை அபிஷேக் தன் பங்கிற்கு கலாய்க்கின்றார்.

இதனை அடுத்து இமான் அண்ணாச்சி மற்றும் ராஜூ ஆகிய இருவரும் போனில் பேசுவது போன்று பேசும் காட்சிகள் உள்ளது. ’நிரூப் நீங்கள் இப்போது தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்க அதற்கு நிரூப் போல் பதில் கூறும் ராஜூ, ‘நான் தனியாக தான் விளையாடுகிறேன், ஆனால் கூட்டமாக சேர்ந்து எல்லோரும் என் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும், எங்கே போய் சேருவது என்று தெரியாமல் எங்கேயாவது போய் சேர்ந்தால் போதும் என்று விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று ராஜூ தனது பங்கிற்கு கலாய்க்கிறார்.

மொத்தத்தில் இன்று ராஜு, அபிஷேக் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நிரூப்பை வச்சு செய்கின்றனர் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.