close
Choose your channels

கமல்ஹாசன் முன் 18 போட்டியாளர்கள்: இன்றைய முதல் புரமோ!

Saturday, October 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் கடந்த ஐந்து நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 18 போட்டியாளர்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக பிரியங்கா, ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் பிக்பாஸ் விட்டை கலகலப்பாக வைத்துள்ளார்கள் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் பிக்பாஸையே கலாய்த்து வருகிறார்கள் என்பது பார்வையாளர்களுக்கு புதுமையான ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபின்னர் முதல்முறையாக கமல்ஹாசனை போட்டியாளர்கள் அனைவரும் வண்ண வண்ண ஆடைகளில் ஆர்வத்துடன் காத்திருக்கும் காட்சி இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

மேலும் இந்த புரமோவில் கமல்ஹாசன் பேசும்போது ’வெற்றிக்கு ஒரே பார்முலா தான். தடைகளை வென்று முன்னேறுவதே. வெற்றி இறுதி இலக்கு அல்ல, தொடர் நிகழ்வுதான். அனைவருக்குமே வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும் இவர்கள் தொடர்ந்து முன்னேறுவார்களா பார்க்கலாம்’ என்பதோடு இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை கதையை கூறும்போது தங்களுக்கு கிடைத்த வெற்றி, அதற்காக தாங்கள் சந்தித்த சவால்கள், தடைகற்களை கூறிய நிலையில் கமல்ஹாசனின் இந்த உரையும் அதற்கு தொடர்புடையதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.