close
Choose your channels

இன்றே எலிமினேஷனா? கமல் அறிவிப்பால் பரபரப்பு!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் பிராசஸ் நடந்தது என்பதும், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 15 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கமல்ஹாசன் சற்று முன் புரமோ வீடியோவில் கூறியபோது, ‘கடந்து வந்த பாதையில் அவர்கள் கதைகளையும் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள், 15 பேர்கள் வீட்டிலிருந்து நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அளித்திருக்கும் வாக்குகள் இந்த வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இன்றிலிருந்தே பார்க்க போகிறீர்கள்’ என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஒருவர் இன்றே வெளியேற்றப்படுவார? அல்லது இன்று ஒருவர், நாளை ஒருவர் என இருவர் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,

மேலும் இன்றைய 2-வது புரோமோவில் ’சின்னப்பொண்ணு மற்றும் தாமரைச்செல்வி இடையே நடந்த பிரச்சினை குறித்து கமல்ஹாசன் விசாரித்தார். இருவரில் யார் தோற்றாலும், வென்றாலும் இருவருமே வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும், இருவருமே நாட்டுப்புறத்தில் இருந்து வந்தவர்கள் தானே’ என்று கூற அதற்கு தாமரைச்செல்வி, சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.