close
Choose your channels

கேப்டன் மதுமிதாவை கதறி அழவைத்த இசைவாணி: இன்னொரு பஞ்சாயத்து?

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு கேப்டன் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வார கேப்டனாக மதுமிதா தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருக்கும் தன்னுடைய பேச்சை யாரும் கேட்க மாட்டேன் என்கிறாகள் என மதுமிதா கதறி அழும் காட்சி இன்றைய 2-வது புரமோவில் உள்ளது.

நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள், அவங்க தான் எல்லாமே அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று இசைவாணியை மதுமிதா குற்றம் சொல்வது போல் தெரிகிறது. அவங்க தான் எல்லாமே அதிகாரமும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், அப்படி என்றால் நான் கேப்டனாக எதற்கு? என்று மதுமிதா அழுது கொண்டே கூறுகிறார்.

இதனையடுத்து அபினய், நிரூப் மற்றும் சிபி ஆகியோர் மதுமிதாவுக்கு ஆறுதல் கூறுவதோடு, யார் யார் கேப்டன் பேச்சை கேட்கவில்லை என்று நீ தாராளமாக புகார் அளிக்கலாம் என்று ஆலோசனை கூறும் காட்சிகளோடு இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது. இதிலிருந்து இந்த வாரம் கமல்ஹாசன் பல பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்க வேண்டிய நிலை இருக்கும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.