close
Choose your channels

போலீஸ்கிட்ட அடிவாங்கினேன்: பிக்பாஸ் நாடியாவின் சோகக்கதை

Thursday, October 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தங்களது சொந்த கதை, சோக கதையை கூறி வரும் நிலையில் இன்று காலை தனது முன்னாள் தோழி யாஷிகா குறித்து ஒரு சில வார்த்தைகள் நிரூப் கூறி அனைவரையும் அசத்தினார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் அடுத்ததாக நாடியாசிங் தனது கதையை கூற வந்தார். அவர் தனது அம்மா மேல் உள்ள வெறுப்பை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘என்னுடைய அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். எனக்கு என்றைக்கு அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது என்றால் போலீஸ்காரங்க கிட்ட என்னை அடி வாங்க வச்சாங்க.

என் வாழ்க்கை முழுவதுமே வேலை வேலை என்று இருந்தேன். நான் என்னுடைய டீனேஜ் வயதை அனுபவித்ததில்லை. கல்லூரி வாழ்க்கையும் அனுபவித்ததில்லை. எனக்கு வாழ்க்கையில் மனிதர்கள் கொடுக்காத பெருமையை ஒரு ஆப் கொடுத்தது என்று கூறியுள்ளார். இவரது கதையும் சுவராஸ்யமாக இருக்கும? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.