close
Choose your channels

நீ சொல்வதை செய்ய முடியாது: கேப்டன் நிரூப் உத்தரவை எதிர்க்கும் போட்டியாளர்கள்!

Monday, November 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்ற நிலையில் திடீரென தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி நிரூப் கேப்டனாக மாறியுள்ளார்.

ஏற்கனவே நிரூப் தனது காயினை பயன்படுத்தி ஒரு வாரம் ஆளுமையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாகி உள்ளதை அடுத்து அந்த ஆளுமையை மீண்டும் தொடர்கிறார்.

இந்த நிலையில் கேப்டன் கொடுக்கும் வேலைகளை செய்ய முடியாது என இமான் அண்ணாச்சி கூறுகிறார். எல்லா வேலைகளையும் என்னால் செய்ய முடியாது என்றும் ஏதாவது ஒரு வேலை மட்டுமே கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறுகிறார்.

’அப்படியெல்லாம் முடியாது நான் சொல்வதை செய்துதான் ஆகவேண்டும், நான் கேப்டன் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் தண்டனை கிடைக்கும்’ என்று நிரூப் மிரட்டுகிறார். மேலும் அபிஷேக்கிடம், ‘நான் உனக்கு ஒரு பவர் கொடுக்கிறேன், இந்த வாரம் முழுவதும் பெட்ரூம் முழுவதும் உனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார்.

’இதற்கெல்லாம் ஒத்துக்க முடியாது, வாய்ப்பே இல்லை’ என்று வருண் ஒருபக்கம் ஆவேசமாக கூறுகிறார். அப்போது நிரூப், ‘நான் கேப்டன் நான் சொல்வதை பண்ணிதான் ஆகணும்’ என மீண்டும் மீண்டும் சொல்ல, ’நீ பண்ணித்தான் ஆகணும் என்றால் பண்ண முடியாது, என்ன செய்வாய்?’ என்று இமான் அண்ணாச்சி அவர்கள் எதிர்கேள்வி கேட்பதுடன் இன்றைய 2-வது புறமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் நிரூப் கேப்டனாக இருக்கும் இந்த வாரம் பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.