close
Choose your channels

உடைந்தது மூவர் கூட்டணி: பிரியங்கா, நிரூப், அபிஷேக் திடீர் மோதல்!

Friday, December 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு குரூப் உண்டாகும் என்பதும் அதே போல் இந்த சீசனிலும் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் நெருக்கமாக ஒரு கூட்டணியாக விளையாடி வந்தனர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென இந்த கூட்டணியில் தற்போது பிளவு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் காரசாரமாக வாதாடும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன.

நேற்றுடன் முடிவடைந்த பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் குறித்து நிரூப் கூறியபோது, ‘என்னை நீங்கள் இஷ்டத்துக்கு கலாய்த்துக் கொண்டிருந்தீர்கள். இந்த டாஸ்க் முழுவதுமே என்னை ஏன் கலாய்த்தீர்கள். நான் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னபோதும் தொடர்ச்சியாக ஏன் கலாய்த்து கொண்டிருக்கின்றீர்கள்’ என ஆவேசமாக பிரியங்காவிடம் கேட்கிறார்.

இதனை அடுத்து அபிஷேக், ‘உன்னை கலாய்த்தது உனக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் வந்து கேள்வி கேள், ஏன் அவளிடம் கத்திக் கொண்டு இருக்கிறாய்? என்று கேட்க அதற்கு பிரியங்கா விளக்கமளிக்கிறார்.

’நாங்கள் கலாய்ப்பது போல் உனக்கு தெரிந்தால் வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே என்று கூறிய அவர் சிபி யுடன் நாங்கள் உட்கார்ந்து உன்னை கலாய்ப்போம் என்று டிஸ்கஸ் செய்தபோது அப்போதே நீ சொல்லி இருக்கலாமே. என் மேல் குற்றம் இருந்தால் நான் வெளியே போகவும் தயார்’ என பிரியங்கா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.