close
Choose your channels

நீ யாரு என்ன கேட்க? ராஜூ, சிபியுடன் ஆவேசமாக மோதும் பாவனி!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியாகும் ஒவ்வொரு புரமோவிலும் ஒரு சண்டை கடந்த சில நாட்களாக காட்டப்பட்டு வருகிறது என்பதும் அந்த வகையில் இன்று வெளியான இரண்டு புரமோக்களிலும் ஏற்கனவே இரண்டு சண்டைகள் நடந்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் பாவனி மற்றும் ராஜு, பாவனி மற்றும் சிபி ஆகியோர் ஆவேசமாக சண்டை போடும் காட்சிகள் உள்ளன. ’நான் அவர் கூட பேசுவேன், தனியாக உட்கார்ந்து கூட பேசுவேன், நான் அவர் கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன், அதைக் கேட்க நீ யார் என பாவனி, அபினய் உடன் பேசுவது குறித்து ராஜுவுடன் ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு ’நீ இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறாய்? என்று ராஜூ கூற மீண்டும் பாவனி, ‘என்னை பற்றி பேசுவதற்கு நீ யார்? என்னைப்பற்றி நீ ஏன் பேசுகிறாய்? என திரும்ப திரும்ப சத்தமாக கேட்க, இதற்கு பதில் சொல்ல முடியாமல் கடும் அப்செட்டில் ராஜூ கண்ணை மூடிக் கொள்கிறார்

இதனை அடுத்து சிபி, ‘நீதான் லவ் இல்லை என்று சொல்கிறாய், பிரண்ட்ஷிப் இல்லை என்று சொல்கிறாய், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் நான் பேச முடியும் என்று கூற அதற்கு ஆவேசமாக பாவனி கத்த, பதிலுக்கு சிபியும் ஆவேசமாக கத்த, இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி ரணகளமாக இருக்கும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.