close
Choose your channels

கணவர் இறந்தபோது நான் அழவே இல்லை: பவானி ரெட்டி

Tuesday, October 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவானி ரெட்டி திருமணமானவர் என்றும், திருமணமான ஏழே மாதத்தில் கணவரை இழந்தவர் என்பதும் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஏற்கனவே தெரிந்தது

இந்த நிலையில் தனது கணவர் குறித்து இசைவானியிடம் அவர் கூறும் காட்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் வந்துள்ளது. என் கணவர் இறந்தபோது நான் ஷாக்காகி அப்படியே உட்கார்ந்து விட்டேன் என்றும் நான் அழவே இல்லை என்றும், என்ன நடந்தது என்பதை எனக்கு நானே நான் திரும்பி யோசித்துக்கொண்டே இருந்ததாகவும் கூறினார். அப்போது இசைவானி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்கும் போல அதுபோல் உங்கள் வாழ்க்கையில் இந்த சோகம்’ என்று கூறினார்

இன்றைய 3 புரோமோக்களில் இருந்து இன்றைய நிகழ்ச்சி முழுவதும் சோகமயமாகவும், சென்டிமெண்ட் ஆகவும் இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக பவானி ரெட்டியின் சோகக்கதை பார்வையாளர்களை அழ வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.